மதுரையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்புக்கட்டண ரயில்: ரயில்வே அறிவிப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (12:09 IST)
குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நடைபெற உள்ளதை அடுத்து மதுரையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
 
மதுரையில் இருந்து ஏப்ரல் 14-ந் தேதிமாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7.30 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள விராவல் சென்றடைகிறது. 
 
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
 
 இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதை அடுத்து தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments