Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போஸ்டர் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

போஸ்டர் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு
, திங்கள், 15 செப்டம்பர் 2014 (16:45 IST)
மதுரை திருமங்கலம் அருகே ஏற்பட்ட போஸ்டர் தகராறில் 2 பேர் அரிவாளால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர்  6 பேரை கைது செய்துள்ளனர்.

ஆலம்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணன். இவர் தனது வீட்டு முன்  நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல் மாரிக்கண்ணனை அரிவாளால் கடுமையாகத் தாக்கியது. அப்போது, எங்கள் சமூக போஸ்டரை எப்படி கிழிக்கலாம் என கூறி அவர்கள் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், மன்மதன் என்பவரையும் அந்த கும்பல் அரிவாளால் தாக்கி உள்ளது. இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாரிக்கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் 12 பேர் மீதும், மன்மதன் கொடுத்த புகாரின்பேரில் 21 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாக்கியராஜ், வனராஜ், நீதிராஜன், ராஜபாண்டி, ராஜ்குமார், சீனிவாசன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil