Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்ளே வர வேண்டாம்: மதுரை கடையில் ஒரு போர்டு

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (16:37 IST)
சென்னையில் இருந்து வந்தவர்கள் உள்ளே வர வேண்டாம்
கொரோனா வைரஸ் சென்னையில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் சென்னை என்றாலே மற்ற ஊர்க்காரர்கள் நடுங்கும் அளவுக்கு சென்னையில் கொரோனா நிலைமை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்குள் மதுரை வந்தவர்கள் உள்ளே வரவேண்டும் என மதுரையில் உள்ள ஒரு கடையில் போர்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மதுரை பழங்காநத்தம் புறவழி சாலையில் உள்ள ஒரு கடையில் 'வாடிக்கையாளர் நலன் கருதி, கரோனா பரவலைத் தடுக்க கடந்த மூன்று மாதங்களில் சென்னையிலிருந்து இருந்து வந்த வாடிக்கையாளர்கள் உள்ளே வருவதை தவிர்க்கவும்' என கடையின் நுழைவாயிலில் போர்டு ஒன்று உள்ளது. இது அப்பகுதியில் உள்ள சென்னை வாழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்று நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை வாழ மட்டும் சென்னை வேண்டும், சென்னையில் ஒரு பிரச்சனை என்றால் மட்டும் சென்னை மக்களை ஒதுக்குவதா? என சென்னை மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments