ராஜினாமா செய்ய போகிறேன்.. மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு.. மீண்டும் இடைத்தேர்தலா?

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (13:46 IST)
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில்  மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 
 
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் தொகுதி பிரச்சனையை குறித்து பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதனால் எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்படுத்தியது. அவர் உண்மையில் ராஜினாமா செய்வாரா? மதுரை தெற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் இளம்பெண் கடத்தப்படவே இல்லையா? மாநகர காவல் ஆணையர் விளக்கம்..!

தேர்தலை திருடி பிரதமர் ஆனவர் மோடி.. இதை Gen Z இளைஞர்களுக்கு புரிய வைப்போம்: ராகுல் காந்தி

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments