Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா செய்ய போகிறேன்.. மதுரை எம்.எல்.ஏ அறிவிப்பால் பரபரப்பு.. மீண்டும் இடைத்தேர்தலா?

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (13:46 IST)
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில்  மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பேசியுள்ளதால் மீண்டும் இடைத்தேர்தல் வருமா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 
 
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மனம் வருந்தி இன்று பேசினார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் தொகுதி பிரச்சனையை குறித்து பலமுறை பேசியும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதனால் எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஏற்படுத்தியது. அவர் உண்மையில் ராஜினாமா செய்வாரா? மதுரை தெற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments