Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு பயந்து பாஜகவில் இணைந்தேன்!? – மதுரை சலூன் கடைக்காரர்

Tamilnadu
Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (13:55 IST)
பிரதமர் மோடியால் புகழப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் தற்போது பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளின் போது மக்களுக்கு உதவ தனது மகளின் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை அளித்தவர் மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இதற்காக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவரை பாராட்டிய நிலையில் மதுரை பாஜகவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அப்போது அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் பாஜகவில் இணையவில்லை என்று மோகன் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மோகன் மற்றும் அவரது மனைவி பாஜகவில் இணைந்துள்ளனர். ஆரம்பத்தில் தான் எந்த கட்சியும் சாராதவன் என மோகன் கூறியிருந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் தனது உயிருக்கு சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பாஜகவில் இணைந்துள்ளதாக மோகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைப்பது எப்போது? தேசிய தேர்வு முகமை தகவல்..!

டீசல் பேருந்துகள் CNG பேருந்துகளாக மாற்றம்! - போக்குவரத்துக் கழகம் எடுத்த முடிவு!

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments