Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ரவுடியின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம கும்பல்

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (12:39 IST)
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி சௌந்திரபாண்டியனை கொன்று அவரது தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்களை போலீச் தேடி கொண்டிருக்கின்றனர்.

மதுரையில் உள்ள திருநகர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர் என்கிற சௌந்தரபாண்டியன். இவர்மேல் 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் மதுரை காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து போலீஸ் பல இடங்களிலும் தேடி வந்தனர். போலீஸிடம் சிக்காமல் வெவ்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் சௌந்தர்.

இந்நிலையில் சௌந்தர் முத்துப்பட்டி பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்று அங்கே தங்கியிருக்கிறார். மேல்மாடியில் அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொன்று தலையை வெட்டி எடுத்து ஒரு பைக்குள் போட்டு கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கின்றனர். சௌந்தரின் அறையிலிருந்து மர்ம நபர்கள் ஓடுவதை பார்த்த உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது தலையில்லாத சௌந்தரின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்தது.

அவர்கள் உடனே போலீஸுக்கு தகவல் சொல்ல, உடனே தேடுதல் வேட்டையை தொடங்கினர் போலீஸார். சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகள் சென்ற பகுதியை கண்டுபிடித்த போலீஸார் அங்கே சென்று தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அபோது ஒரு குப்பைமேட்டு பகுதியில் ஒரு பைக்குள் சௌந்தரின் தலை இருப்பதை பார்த்து அதை கைப்பற்றினர்.

கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments