Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால வருமானம் இல்ல; விடுதிக்குள் விபச்சாரம்! – மதுரையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:14 IST)
மதுரையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் விடுதி ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக விபச்சாரம் நடந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்வது முற்றிலும் நின்று விட்டது. இதனால் மதுரை விடுதிகள் பல சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் சில விடுதிகளில் ரகசியமாக பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் மதுரை காக்கா தோப்பில் உள்ள ஸ்டார் டவர் என்ற விடுதியில் சில அறைகளில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அங்குள்ள பெண்களை மீட்டு அரசு காப்பத்திற்கு அனுப்பிய போலீஸார், பெண்களை பாலியல் தொழிலுக்கு கொண்டுவந்த குமார், முகமது ரிஸ்வான், தசரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

விடுதியில் பாலியல் தொழில் செய்ய அனுமதியளித்த விடுதி உரிமையாளரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்