Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி! – சீல் வைத்த மாநகராட்சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:06 IST)
மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி என விளம்பரம் செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் புதிதாக திறந்த பிரியாணி கடை ஒன்றில் மக்களை ஈர்க்கும் விளம்பர நோக்கில் 5 பைசாவுக்கு பிரியாணி என்று விளம்பரம் செய்துள்ளனர். இதனால் சுற்றுவட்டாரத்தில் மக்கள் பலர் பழைய 5 பைசாவுடன் பிரியாணி கடையில் குவிந்ததால் அப்பகுதி கூட்டமாக இருந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி பிரியாணி கடையில் கூட்டம் அதிகமாக குவிந்ததால் சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதிய பிரியாணி கடை திறக்கப்பட்ட மறுநாளே சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments