Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மீண்டும் கைது

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மீண்டும் கைது
, திங்கள், 21 செப்டம்பர் 2015 (05:26 IST)
தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கோரி, காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்த இடம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
 

 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி, மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்து காந்தியவாதி சசி பெருமாள்  உயிர் நீத்த மார்த்தாண்டம், உண்ணாமலை கடை எதிரே உள்ள செல்போன் கோபுரம் அருகில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறி, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்தனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil