Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு: உரிமையாளருக்கு நோட்டீஸ்

Mahendran
வியாழன், 12 செப்டம்பர் 2024 (13:00 IST)
மதுரையில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியர் உள்பட இரண்டு பேர் பலியான நிலையில் அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்த நிலையில் தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சு திணறி ஒரு ஆசிரியை உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.

இதையடுத்து விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அவர்களும் கட்டிடத்தை பார்வையிட்டார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் பலியான விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments