Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மல்லிகை பூக்களுக்கு சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு!

Mahendran
சனி, 15 மார்ச் 2025 (11:06 IST)
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், 2025-26ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று   தாக்கல் செய்து வரும் நிலையில்  மதுரை மல்லிகை பூக்களுக்கு சிறப்புத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது:
 
"மலர் சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகளுக்கு தினசரி வருமானத்தை உறுதி செய்ய ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மல்லிகை திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடிகள் வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், ரோஜா மலர் சாகுபடிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிக், மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
 
பாரம்பரிய காய்கறி சாகுபடியை மேம்படுத்த ரூ. 2.40 கோடி நிதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து விற்பனை செய்ய கிடங்குகளை அமைக்க மானியமாக ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் காய்கறி விதைத்தொகுப்புகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடி தொகுப்புகள், 1 லட்சம் இல்லங்களுக்கு பயிர் விதை தொகுப்புகள் வழங்கப்படும்.
 
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க, ஊரக பகுதிகளில் 5 புதிய காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் முதல்வர்.. விஜய், திருமாவளன் துணை முதல்வர்கள்.. பேச்சுவார்த்தை தீவிரம்.. பரபரப்பு தகவல்..!

ஜூன் 28 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு, வெயிலும் தொடரும்.. வானிலை எச்சரிக்கை!

இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!

முருகர் மாநாட்டிற்கு வரவிருந்த பவன் கல்யாண் விமானம் கோளாறு.. பயணம் ரத்தா?

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் கண்டனம், டிரம்ப் பரிந்துரையில் சறுக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments