Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடத்திற்கேற்ப குடிதண்ணீர் விலை அதிகரிப்பு! – மதுரையில் போஸ்டரால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (11:08 IST)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மதுரையில் குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரும் அதிகளவில் கிடைக்காத நிலையில் வெயில் காலமும் நெருங்கி விட்டதால் மதுரையின் பெரும்பாலான பகுதிகள் தனியார் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் சப்ளையை நம்பியே உள்ளன.

இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மதுரை தனியார் குடிநீர் சப்ளை வாகனங்கள் குடிநீர் விலையை குடத்தின் அளவுக்கு ஏற்ப உயர்த்தியுள்ளன. அதன்படி பெரிய குடத்தில் தண்ணீர் ரூ.13, சிறிய குடம் ரூ.8 மற்றும் கைக்குடம் ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடிதண்ணீர் விலையேற்றம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments