Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் ஊரடங்கு; சிவகங்கையில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (13:10 IST)
மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுரைவாசிகள் பலர் மது வாங்க சிவகங்கையில் குவிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதை தொடர்ந்து மதுரையிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் அங்கும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. மாவட்ட எல்லைகள் தடுப்புகள் போடப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மதுரைக்குள் அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மதுரை முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் அருகிலுள்ள சிவகங்கை மாவட்ட எல்லையான புலியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிய தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் கடை முன்பு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் மதுவாங்க காத்திருக்கும் சூழலில் அவர்கள் இ-பாஸ் பெற்று வந்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திடீரென புலியூர் பகுதியில் மதுரையிலிருந்து மதுப்பிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments