Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் கண்ணாடியை உடைத்த ’குடிகாரர்’ ; பொதுமக்கள் ’ தர்ம அடி’

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (18:49 IST)
மதுரை மாவட்டத்தில் இயங்கும்  அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். நடத்துனர் அவரிடம் டிக்கெட் எடுக்கும் படி கூறினார். ஆனால் அவர் தகராறு செய்ததுடன்  பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மதுரையில் ஆர்.எஸ் மங்கலத்தில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் ஒரு இளைஞர் இருந்தார்.

அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துனர் கேட்டுள்ளார். அந்த இளைஞர் மது போதையில் இருந்ததால் மறுப்புத் தெரிவித்ததுடன், நடத்துனரிடம் தகராறு செய்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் பேருந்தில் அவரது இம்சை அதிகரிக்கமோ நடத்துனர் அவரை பேருந்தை விட்டு கீழே இறக்கிவிட்டார். ஆனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் கல்லை எடுத்து பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளார்.
 
இதனால் சக பயணிகள் அனைவரும் சரமாரியாக அவரை தாக்கினர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து போலீஸிடம் இளைஞரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments