Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர வங்கி ஊழியருக்கு கொரோனா: 3 நாட்கள் விடுமுறை என அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:15 IST)
மதுரையில் உள்ள ஆந்திரா வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வங்கிக்கு மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தெருக்களை சீல் வைக்க மதுரை மாநகராட்சி இன்று முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது .
 
இந்த நிலையில் மதுரையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஆந்திர வங்கி ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த வங்கிக்கு 3 நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது .
 
வங்கி முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்றும் அதன் பிறகே வங்கி திறக்கப்படும் என்றும் அதுவரை வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கிளைகளை பயன்படுத்திக்கொள்ள வங்கி மேலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் உள்ள ஆந்திர வங்கி ஊழியருக்கு கொரோனா என்ற தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments