Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
, செவ்வாய், 1 டிசம்பர் 2015 (13:19 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால் அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
 

 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 
மேலும் சென்னை மாநில கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அந்த தேர்வு வரும் 16-ம் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil