Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது: மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (13:36 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிரான அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததும் சசிகலா அதிருப்தியாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓபிஎஸ் பக்கம் அணிதிரள்கின்றனர்.


 
 
நேற்று அதிரடி திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் சேர்ந்தார். ரவுடிகள் கும்பலில் இருந்து அதிமுகவை மீட்கவே பன்னீருடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மேலும் அதிரடியாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்க அங்கீகாரம் அளிக்க கூடாது என கூறியுள்ளார். அவைத்தலைவரின் கடிதம் என்பதால் இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே சசிகலாவை அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்ததில் சட்ட சிக்கல் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில் அவைத்தலைவரின் இந்த கடிதம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments