Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்னீர்செல்வத்தை காப்பாற்றுங்கள்! - மத்திய அமைச்சரிடம் முறையிட்ட ஓ.பி.எஸ். அணி

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (08:27 IST)
ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர் பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது அணியினர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளனர்.


 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். பெரியகுளத்திலிருந்து தேனிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது சில மர்ம நபர்கள் அவரது காரில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனுக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளதால் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பு வழங்க வேண்டுமென மைத்ரேயன் எம்.பி., தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன் கூறுகையில், “பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் அதிகரித்து வருகின்றன. ஓ.பி.எஸ். கையை வெட்டுவேன் என்று ஒருவர் வெளிப்படையாகவே கூறுகிறார்.

எனவே அவருக்கும், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனுக்கும் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி அமைச்சரிடம் மனு அளித்தோம். அவரும் புலனாய்வுத் துறையின் மூலம் ஆராய்ந்து பாதுகாப்பு வழங்குகிறேன் என்று உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments