ஜெ.வை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் - மதுசூதனன் பேட்டி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:11 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அப்பலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரும் அவரை பார்க்க வில்லை. சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை. எனவே, ஜெ. இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம்” எனக் கூறினார். 
 
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜெ.வின் மரணத்தில் சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் எனவும், ஜெ. நலமாக இருக்கிறார். அவர் இட்லி சாப்பிட்டார் என பேட்டி கொடுத்த அனைத்து அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் மதுசூதனன் “ மருத்துவமனையில் ஜெ. இருந்த போது என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை. இதை நான் அப்போதே கூறினேன். திண்டுக்கல் சீனிவாசன் இப்போதுதான் அதை கூறியிருக்கிறார். ஜெ.வை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர். தசரா விழாவில் சூரனை வதம் செய்தது போல, துர்க்கை அம்மன் சசிகலா குடும்பத்தினரை பழி வாங்குவார்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments