Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேந்தர் மூவிஸ் மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

வேந்தர் மூவிஸ் மதனை ஒரு வாரத்தில் கைது செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (19:25 IST)
வேந்தர் மூவிஸ் மதனை கடந்த மே மாதம் முதல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் உயர் நீதிமன்றம் ஒரு வாரத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உதத்ரவிட்டுள்ளது.


 


 
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் தலைமறைவானார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இஅடம் வாங்கி தருவதாக ரூ.72 மோசடி செய்ததாக மதன் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதையடுத்து காவல்துறையினர் மதனை வலை வீசி தேடி வந்தனர். மதனின் தாய் தன் பிள்ளையை கண்டுப்பிடித்து தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இதையடுத்து கடந்த மாதம் பச்சமுத்து கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார். இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள், குற்றப்பிரிவு காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்றால், நாங்கள் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மற்ற வேண்டும்.
 
எனவே மதனை ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை ஸ்டிரைக் : அரசு பள்ளிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்