Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"மதன் தலைமறைவு - பல கோடி மோசடி விவகாரம்" - பாரிவேந்தர் கைது?

"மதன் தலைமறைவு - பல கோடி மோசடி விவகாரம்" - பாரிவேந்தர் கைது?

, சனி, 4 ஜூன் 2016 (08:31 IST)
வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவு மற்றும் பல கோடி ரூபாய் பண பரிவர்த்தணை விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஆர்.எம். கல்லூரி  தலைவர் பாரிவேந்தரை போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
 

 
சென்னை, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்க்க வேந்தர் மூவிஸ் மதனிடம் பலர் பல லட்சக்கணக்கில் பல கோடி ரூபாய் கொடுத்ததை, மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
 
மேலும், சென்னை, வளசரவாக்கம், சவுத்ரி நகர் பகுதியில் எஸ்ஆர்எம் கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் வீடு உள்ளது. அவரது வீட்டை நேற்று முன்தினம் இரவு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
மேலும், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணை வேந்தர் பாரிவேந்தரிடம் உள்ளதாக மதனின் தாயார் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
 
இதனால், பாரிவேந்தர் போலீஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், உரிய ஆதாரங்கள் கிடைக்கும்பட்டத்தில் அவர் கைதாகும் சூழ்நிலை உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பித்தார் "பிரேமலதா விஜயகாந்த்"