Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரத்தி துரத்தி கடித்த வெறி நாய்கள்.! சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்.!!

Senthil Velan
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:47 IST)
கள்ளக்குறிச்சி அருகே வெறி நாய்கள் கடித்ததில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி அடுத்த வி.மாமந்தூர் கிராமத்தில் வெறி நாய்கள்  சுற்றித்திரிகின்றன. காலைக்கடன் முடிப்பதற்காக ஏரிகரை சென்ற சிறுவர்களை தெருநாய்கள் துரத்தியதாக தகவல் வெளியாகியது. தெருநாய்கள் துரத்துவதை கண்டு ஓட்டம் பிடித்த சிறுவர்கள் உட்பட 15 பேரையும் நாய்கள் கடித்து குதறின.

இதில் கை, கால், முகம் என பல்வேறு இடங்களில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நாய்க்கடிக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  தெரு நாய்கள் கடித்ததில் காயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ: பெண் மருத்துவர் படுகொலை.! நாடே வெட்கி தலைகுனிய வேண்டும்.! சீமான் கண்டனம்..!! 
 
சாலைகளில் திரியும் வெறிநாய்களை உடனே பிடித்து, நாய் பராமரிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments