Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பூஸ்டர், மாஸ்க், படுக்கை..! கொரோனாவை எதிர்கொள்ள தயார்!’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (10:30 IST)
நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கொரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் பல மருத்துவமனைகளில் அவசரகால ஒத்திகை நடைபெற்ற நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஒத்திகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments