Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்துள்ள விஜயகாந்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது - மு கருணாநிதி

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:20 IST)
தமிழக பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்துக்குத் தேவைப்படும் கூட்டணியாக இருந்தால் இது குறித்து திமுக பரிசீலிக்கும் என்று கூறினார்.
 
பவானி சிங் வழக்கில் தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய கருணாநிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றியல்ல, நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments