Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதியிடம் முறையிட்டுளோம். நல்ல தகவல் கிடைக்கும். ஸ்டாலின் நம்பிக்கை

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (20:41 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சற்று முன்னர் டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை சந்தித்து கடந்த சனிக்கிழமை சட்டபேரவையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் சபாநாயரின் ஒருதலைபட்ச முடிவுகள் ஆகியவை குறித்து முறையிட்டுள்ளார்.




சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளதாகவும், விரைவில் அவரிடம் இருந்து நல்ல தகவல் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் சந்திப்பு முடிந்த கையோடு அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லேப்டாப் தருகிறோம்.. கோட்சே கூட்டத்தின் பின்னால் சென்று விடாதீர்கள்! - மாணவர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாணவனுக்கு பெண் குரல்! அத்துமீறிய ஆங்கில ஆசிரியர்! - மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞருக்கு சிறை.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

உணவு சரியில்லை என கூறி ஊழியரை அடித்த எம்.எல்.ஏ.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments