Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு? லயோலா கல்லூரி மாணவர்களின் கணிப்பு முடிவு..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:17 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி யாருக்கு என லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் தேமுதிக ஆகிய நான்கு அரசியல் கட்சிகளும் சில சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது. 
 
அதிமுகவுக்கு 36 சதவீத வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 10 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் யாருடைய ஆட்சி சிறப்பான ஆட்சி என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு 53 சதவீதமும் முக ஸ்டாலின் ஆட்சிக்கு 42 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதும் ஆச்சரியமான தகவலாகவும் உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments