Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்ட மாணவி நந்தினி கைது

அதிமுக அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்ட மாணவி நந்தினி கைது
, திங்கள், 14 டிசம்பர் 2015 (02:02 IST)
சென்னையில், அதிமுக அலுவலகம் முன்பு  உண்ணாவிரதம் இருக்க முயன்ற மதுரை சட்ட மாணவி நந்தினியை போலீசார் கைது செய்தனர்.
 

 
தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கடந்த பல வருடங்களாக தனது தந்தையுடன் தொடர் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றார்.
 
இந்த நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
 
இந்த தகவல் அறிந்த ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோகுலகுரு சம்பவ இடத்திற்மகு விரைந்து சென்று, மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோாரை கைது செய்தனர்.  
 

Share this Story:

Follow Webdunia tamil