Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: மீண்டும் புயலா?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (09:22 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு புயல் மிக்ஜாம் புயலாக மாறி சென்னை உள்பட வட மாவட்டங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா? அதன் பின் புயலாக மாறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments