Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையை கடக்க தொடங்கிய காற்றழுத்த தாழ்வு.. 11 மாவட்டங்களில் இன்று மழை!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (07:55 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு இன்று கரையை கடக்க தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது என்பதும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்து தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்க தொடங்கி விட்டதாகவும் அதனால் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி திருநெல்வேலி சிவகங்கை தஞ்சாவூர் கடலூர் உள்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments