Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி: விருதுநகர் அருகே சோகம்!

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (11:59 IST)
விருதுநகர் அருகே காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரோசல்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா என்பவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனுக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதுகுறித்து அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

நேற்று மாலை விருதுநகர் வழி சாத்தூர் ரயில் பாதையில் வந்த ரயிலின் முன்பு பாய்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments