Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் திருமணம்-விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதல்: பதட்டம்-போலீஸ் குவிப்பு

காதல் திருமணம்-விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதல்: பதட்டம்-போலீஸ் குவிப்பு
, திங்கள், 28 டிசம்பர் 2015 (05:43 IST)
விழுப்புரம் அருகே ஒரு இளம் ஜோடிகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பெரும் பதட்டம் நீடிக்கின்றது.
 

 
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள உடையநாச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு இளம் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரு சமூகத்தினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
 
இதில் ஆவேசம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை அடித்து உதைத்தனர். மேலும், சிலரது வீடுகளை சூரையாடினர். இதனால்,  அப்பகுதியில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
 
இதில், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், உடையநாச்சி கிராமத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil