Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் விவகாரம்: அமைச்சர் ரமணா மீது கொலை மிரட்டல் புகார்

காதல் விவகாரம்: அமைச்சர் ரமணா மீது கொலை மிரட்டல் புகார்
, வெள்ளி, 20 நவம்பர் 2015 (01:51 IST)
தனது காதலை பிரிக்க தமிழக அமைச்சர் முயற்சி செய்வதாக இளைஞர் ஒருவர் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 

 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டி.வி.புரத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த பரத், மீஞ்சூர் ஜானகிராமபுரம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மகள் மஞ்சுபிரியாவை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு மஞ்சுப்பிரியா வீட்டில் கடும் எதிர்ப்பு கிலம்பிள்ளது. பின்பு, திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.
 
தமிழக அமைச்சர் ரமணா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், தனி செக்யூரிட்டி கூடுதல் எஸ்.பி.பெருமாள் தூண்டுதலில் பேரில் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் உதய பானு என்னை மிரட்டுகிறார்.
 
தமிழக அமைச்சர் பி.வி.ரமணா சாதி அடிப்படையில் எனது காதலை தடுத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார்.
 
இந்த சம்பவத்திற்கும் தனக்கும் துளியும் தொடர்பு இல்லை என அமைச்சர் ரமணா மறுத்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil