Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரி அதிபர் வீட்டில் ஐடி சோதனை : ரகசிய அறையில் சிக்கிய பணம்

Webdunia
சனி, 4 மே 2019 (14:59 IST)
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக ரூபாய் 8.25 கோடி பணம் சிக்கியது. இதில் 5 கோடி ரூபாய் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என்று தெரியவந்துள்ளது.
வெள்ளக்கிணறுவில் உள்ள மார்ட்டின் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் நடத்தினர்.  அங்கு வீட்டின் மேல் புரத்தில் கூரையில் ரகசிய அறை ஒன்று இருந்துள்ளது. அங்கு செல்வதற்கு ரகசிய படிக்கட்டின் வழியே தான் செல்ல முடியும் என்பதால் அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்தனர்.
 
பின்னர் அந்தப் படிக்கட்டில் சென்று சோதனை நடத்தினர். அங்கு பல துணிப்பைகளில் 2000, 500, 200, 20 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அறையில் இருந்த கட்டில்களுக்கு அடியில் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments