ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்..! கிடைக்கும் என நம்புகிறோம்.! வேல்முருகன்..

Senthil Velan
சனி, 2 மார்ச் 2024 (14:37 IST)
மக்களவைத் தேர்தலில் திமுக தேர்தல் குழுவிடம் ஒரு தொகுதி கேட்டுள்ளதாகவும்,  கேட்டுள்ள தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தேர்தல் குழுவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  2024 மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.  அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்துள்ளோம் என்றும் கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றியில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நானும் பங்காற்றியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
 
சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் ஒலிப்பது போல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்தார். ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்லவதாக திமுக தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

ALSO READ: சாந்தன் மரணத்திற்கு திமுகவே காரணம்.!! எடப்பாடி பழனிச்சாமி.!!
 
மேலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியதாக வேல்முருகன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments