Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக? விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

Prasanth Karthick
ஞாயிறு, 17 மார்ச் 2024 (14:41 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனுக்களை பெறத் தொடங்கியுள்ளது தேமுதிக தலைமை.



நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்னும் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்பது குறித்து உறுதியாகாமல் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையவே சாத்தியம் என கூறப்படுகிறது.

எனினும் கூட்டணி குறித்த இழுபறிக்கு நடுவே விருப்பமனு விநியோகத்தை தேமுதிக தலைமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் தங்களது விருப்ப மனுக்களை மார்ச் 19ம் தேதி காலை 11 மணி முதல் மறுநாள் மார்ச் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: அவர் 28 பைசா மோடின்னா.. நீங்க என்ன Drug உதயநிதியா? – வானதி சீனிவாசன் கண்டனம்!

மேலும் பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கூட்டணி அமைந்தால் கிடைக்கும் தொகுதிகளில் விருப்பமனு அளித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்து போட்டியிடலாம் என்றும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்படாத பட்சத்தில் தனித்து நின்று போட்டியிடும் முனைப்புடன் தேமுதிக முன் தயாரிப்பாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments