Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் விடுமுறையுடன் ஜனவரி 13ஆம் தேதியும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (13:35 IST)
ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்குகிறது.
 
இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி தேர்த்திருவிழா மற்றும் 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, கடலூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் ஒரு நாள் கூடுதலாக பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments