Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகக் குறுகிய கால அவகாசத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் - ஞானதேசிகன்

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (10:37 IST)
உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.

மூப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஞானதேசிகன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மிகக் குறுகிய கால அவகாசத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுத் திரும்பப் பெறப்பட்ட அதே தேதியில், தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட அடையாளம் காணப்பட்ட வேட்பாளர்கள் இப்போதும் தயாராக இருக்கின்றனர்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்“ என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments