Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது உறவினர்

4 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது உறவினர்
, வியாழன், 25 செப்டம்பர் 2014 (07:56 IST)
சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள்  சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொட்டியாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதுடைய கணேசன். கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இக்கிராமத்தில் திருவிழா நடந்தது.
 
அப்போது, இவரது நெருங்கிய உறவினரின் மகளான 4 வயது சிறுமியை வீட்டிலிருந்து மிட்டாய் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்றுள்ளார்.
 
பின்னர் அக்கிராமத்திலுள்ள மறைவிடத்திற்குக் கூட்டிச் சென்று சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெற்றோர்களிடம் சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
 
ஆனால், பெற்றோர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியதைத் தொடர்ந்து, திருச்சுழி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்தனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா சிறுமியைப் பாலியல் பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக கணேசனுக்கு 10 ஆண்டுகளும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 4 ஆண்டுகளும் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
 
இதையடுத்து, காவல் துறையினரின் கணேசனை மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil