Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:52 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த சில நாட்களாக மதுவுக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார் என்பதும் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பதை அடுத்து அந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்றும் தேசிய அளவில் மதுவை ஒழிப்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்தால் ஒரே நாளில் தேசிய அளவில் மதுவை ஒழிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப்பொருள் வேண்டாம், மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிற போது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?  அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments