Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மதுவிலக்கு துளிகூடச் சாத்தியமில்லை: குஷ்பு தகவல்

தமிழகத்தில் மதுவிலக்கு துளிகூடச் சாத்தியமில்லை: குஷ்பு தகவல்
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (22:31 IST)
தமிழகத்தில் மதுவிலக்கு துளிகூடச் சாத்தியமில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரித்துள்ளார்.
 

 
இது குறித்து, பிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இன்று நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்றால், தமிழகத் தலைவர் இளங்கோவன், அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்து பேசியே அந்த முடிவை எடுத்து இருப்பார்.
 
மற்ற கட்சிகளைப் போன்று, அரசியல் லாபத்திற்காகவும், ஒட்டு வாங்குவதற்காகவும் செயல்படும் கட்சி காங்கிரஸ் கட்சி அல்ல. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதைச் செயல்வடிவம் கொடுத்துச் செயல்படும் கட்சிதான் காங்கிரஸ் கட்சி.
 
அது மட்டும் அல்ல, எதைச் செய்தாலும் நன்கு யோசித்துச் செய்வோம், மற்ற கட்சிகள் பூரண மதுவிலக்கு தேவை என்கிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இது மக்களுக்கும் தெரியும், ஏன், எங்களுக்கும்கூடத் தெரியும்.
 
நாடு முழுவதும் மதுவுக்குத் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். இதுவரை இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும், தமிழகத்தில் மதுவிலக்கு துளியும் சாத்தியமில்லை என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil