மதுபான பார்களை கண்காணிக்க வேண்டும் –அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (21:45 IST)
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலக்கு மதுபானம் விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், இன்று சென்னையில் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

அதில்,  டாஸ்மாக் கடைகள் உத்தரவிடப்பட்டுள்ள நாட்களில் மூடப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும். மதுபான பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். ஆலை உற்பத்திற்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் மாநில எல்லைகளில் வெளிமாநில மது, சாராய விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆலை உரிமைதாரர்களிடம் மெத்தனால் விற்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments