Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

J.Durai
வெள்ளி, 29 மார்ச் 2024 (14:21 IST)
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பொன்னுசாமி வயது(48) என்பவர்  கடந்த 2021- ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக  அவர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
இவ் வழக்கின் விசாரணை  முடிவு பெற்று குற்றவாளி பொன்னுசாமிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற் கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் பிரபு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் (இ.கா.ப) பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments