Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிகளை ஒப்படையுங்க.. விடுமுறை கிடையாது! – போலீஸுக்கு உத்தரவு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்களிடம் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மட்டும் 2700 பேர் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். அதில் 600 பேர் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர்.

தேர்தல் முடிந்ததும் துப்பாக்கிகள் திரும்ப அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடியும் வரை அவசர தேவைகள் தவிர்த்து விடுமுறை எடுக்க போலீசாருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments