Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.- அமைச்சர் உதயநிதி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:01 IST)
சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகளை அமைச்சர் உதயநிதி மேற்கொண்டார்.

இதுகுறித்து உதய நிதி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழர்தம் வாழ்வு உயர தன் வாழ்வெல்லாம் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி,  திமுக இளைஞரணி-க்கு கலைஞர் படிப்பகம் அமைத்தல், கலைஞர் மாரத்தான், கலைஞர் சொற்பொழிவு போட்டிகளை நடத்துவது ஆகிய பொறுப்புகளை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார்கள். 
 
அதன் ஏற்பாட்டு பணிகள் குறித்து கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களுடன் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினோம்.
 
இக்கூட்டத்தில், சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டோம்.
 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.''என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments