Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.- அமைச்சர் உதயநிதி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:01 IST)
சேலம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகளை அமைச்சர் உதயநிதி மேற்கொண்டார்.

இதுகுறித்து உதய நிதி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழர்தம் வாழ்வு உயர தன் வாழ்வெல்லாம் உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி,  திமுக இளைஞரணி-க்கு கலைஞர் படிப்பகம் அமைத்தல், கலைஞர் மாரத்தான், கலைஞர் சொற்பொழிவு போட்டிகளை நடத்துவது ஆகிய பொறுப்புகளை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார்கள். 
 
அதன் ஏற்பாட்டு பணிகள் குறித்து கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களுடன் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினோம்.
 
இக்கூட்டத்தில், சேலத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணியின் மாநில மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டோம்.
 
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சேலத்தில் நடைபெறவுள்ள இளைஞரணி மாநில மாநாடு சரித்திரம் படைக்கட்டும்.''என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments