Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை..! ரூ .5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை..!!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (13:44 IST)
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி மூன்று மணி நேரத்தில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
 
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உளுந்தூர்பேட்டையில் உள்ள வார சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக இருந்தது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில், தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
 
காலை ஐந்து மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, பெங்களுார் ஐதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட அதிக விலைகொடுத்து ஆடுகளை வாங்கிக் சென்றனர்.
 
இதில், வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் வரை இந்தச் சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments