Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அசம்பாவிதத்திற்கு தலைவர்களே பொறுப்பு”.. நீதிமன்றம் கறார்

Arun Prasath
திங்கள், 23 டிசம்பர் 2019 (09:24 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு திமுக கூட்டணி கட்சிகள் இன்று பேரணி நடத்தவிருக்கும் நிலையில் , அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்கள் தான் பொறுப்பை ஏற்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பல வன்முறைகளும் அரங்கேறின. அதில் பஸ்கள், வேன்கள்  கொளுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் திமுக கூட்டணி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே ”போலீஸாரின் முறையான அனுமதி பெறாமல் திமுக கூட்டணி பேரணி நடத்தவுள்ளதாகவும், அதனை தடை செய்யவேண்டும் எனவும் இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி, மற்றும் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த அனைவருக்கு உரிமை உண்டு. ஆனால், பொது சொத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தலைவர்கள் தான் பொறுப்பாக வேண்டும்” என இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments