Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி இறுதி அஞ்சலி - கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த முக்கிய தலைவர்கள்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (10:55 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலியின் போது ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
அப்போது பொதுமக்கள் விஐபி வரிசையில் அத்துமீறி நுழைந்ததால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இதனிடையே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டத்தில் சிக்கினார். பின் ராகுலை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்து சென்றனர். 
அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், அகிலேஷ் யாதவ், லாலு மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அவர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments