Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டக்கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்த ஆசிரியர் கைது

சட்டக்கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்த ஆசிரியர் கைது
, வெள்ளி, 18 மார்ச் 2016 (19:15 IST)
கோவையில் சட்டக்கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்த தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
 


 

கோவை வடவள்ளியைச் சேர்ந்த எம்.திலக்பிரபு என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருதமலையில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சென்னையைச் சேர்ந்த மாணவியை திலக்பிரபு ஒரு தலையாக காதலித்து வருகிறார். மேலும், திலக்பிரபு வீட்டின் அருகே அந்த மாணவி வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார். 

அந்த மாணவியை பலமுறை சந்தித்த அந்த ஆசிரியர், தான் உன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த வந்த அந்த மாணவி தன்னை இனிமேல் சந்திக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவி தன்னுடைய வீட்டு அருகே இருந்த வாலிபர் ஒருவருடன் நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த ஆசிரியர் ஆத்திரமடைந்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து திலக்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil