Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி காலத்தில் சொத்துக்களை வாங்கி குவித்த துரைக்கண்ணு??

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (12:56 IST)
அமைச்சர் துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31 அன்று மூச்சு திணறல் மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இழப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல்கள் தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு தனது பினாமிகள் பெயரில் 2,500 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவரே வருமான வரித்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இது குறித்து உளவுத்துறை நடத்திய விசாரணையில் அமைச்சர் துரைக்கண்ணு இறப்பதற்கு 6 மாதத்துக்கு முன் குடும்பத்தினர் பெயரில் 500 ஏக்கரில் தோப்புகள், நிலத்தை வாங்கி குவித்துள்ளதாகவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சொத்து வாங்கி குவித்துள்ளதாகவும், வெளிநாட்டிலும் நகைக்கடை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments