Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட 20 விமானங்கள்

Webdunia
புதன், 18 நவம்பர் 2015 (04:31 IST)
கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து 20 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு சென்றது.
 

 
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
 
இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து நியூ டெல்லி, மும்பை,  திருச்சி, மதுரை, கோவை, ஐதரபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
 
சரியான நேரத்தில் விமானம் இயக்காததால், விமானப் பயணிகள் கடும் அவஸ்தை அடைந்தனர். இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், மழை காரணமாக தங்களது வீடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதனாலே விமானம் இயக்க தாமதம் ஏற்பட்டது என விளக்கம் அளிதனர். 
 

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments